Posts

Showing posts from January, 2020

கிறிஸ்துவை இழிவுபடுத்தும் கிறிஸ்தவர்கள்

*கிறிஸ்துவை இழிவுபடுத்தும் கிறிஸ்தவர்கள்* இந்தியாவுக்கு கிறிஸ்தவம் வந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டன. தன் சீடர்களிடம் கிறிஸ்து கட்டளையிட்ட நற்செய்தி அறிவிப்பு பணியின்மூலம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அனுதினமும் வளர்ந்துகொண்டிருப்பதுதான் நிதர்சனமான உண்மை. கிறிஸ்தவர் செய்வதுபோல இஸ்லாமியர்கள் அவர்களுடைய மதத்தை இந்தியாவில் பரப்பினாலும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் அன்பின் நற்செய்தி ஊழியத்தை இறை வழிகாட்டுதலோடு, தீர்க்கதரிசன வெளிப்பாடுகளோடு, அறப்பணிகளோடு, தியாக சிந்தையோடு, அற்புத விடுதலை ஊழியங்களை அற்பணித்து செய்வதுபோல அவர்கள் செய்யவில்லை. கிறிஸ்தவ ஊழியர்கள் சந்து பொந்தெல்லாம் நுழைந்து அவமானங்கள், துன்பங்களை அனுபவித்து மக்களை அக்கரையாக ஆதாயம் செய்வதுபோல இஸ்லாமியர்கள் இந்தியாவில் முனைப்போடு செயலாற்றவில்லை.  ஆனால்,  இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்தவர்களுடைய எண்ணிக்கை இந்தியாவில் 2.3 விழுக்காடு என்றும், கிறிஸ்தவம் வந்து 650 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள் 19 விழுக்காடு என்றும் அரசு மக்கள் தொகை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால், கிறிஸ்தவர் நிஜமாகவே 2.3 விழுக...

சாதியமே கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடை!

*ஆபிரகாம் சாதி பார்த்தாரா?* சாதி உணர்வுடைய 'கிறிஸ்தவ போதகர்கள்' பலர் தங்கள் சாதிவக்கிரப் பண்பாட்டை நியாயப்படுத்த, *"ஆபிரகாம், ஈசாக்கு போன்ற இறைபக்தர்கள் சாதி வேறுபாட்டுக் கொள்கையோடுதான் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்திருக்கின்றனர்"* என்று போதித்துக்கொண்டிருக்கிறார்கள். கல்வியறிவுடைய சபை மக்கள்கூட அதை இறைவார்த்தையோடு ஆராயாமல் அப்படியே கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். அவர்களுடைய இந்த சமூகவிரோதக் கருத்தை உண்மையா பொய்யா என்று ஆராயவேண்டும் அல்லவா! இல்லாவிட்டால் கிறிஸ்தவத்துக்குள் இன்று காணப்படும் எல்லா சாதிச் சண்டைகளுக்கும் ஆபிரகாம், ஈசாக்கு என்னும் ஆன்மீகவாதிகளே காரணம் என்றாகிவிடும். கடைசியில் சமத்துவ சமூகத்தை தேடும் மக்கள் இயேசு கிறிஸ்துவிடம் வைத்திருக்கும் அபிமானமும் அழிந்துவிடும். ஆபிரகாம் தன் வேலைக்காரன் எலியேசரை அனுப்பி தன் மகன் ஈசாக்குக்கு பெண் தேடிய சம்பவத்துக்கு வருவோம். _ஆபிரகாம் தம் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை (எலியேசர்) நோக்கி, "விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்...

வேதம் ஜாதி பார்ப்பதில்லை நாம் எல்லோரும் பரிசுத்த ஜாதி

கிறிஸ்தவத்தில் இன்றும் ஜாதி பார்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை இது ஒருபுறமிருக்க எந்த ஜாதியை பிரித்தது யார் ஏற்றுக்கொண்டது யார் ஏன் இப்படி பிரித்தார்கள் ஏன் அப்பொழுது ஏற்றுக்கொண்டார்கள் என்று பார்த்தோமானால் அது மிகவும் வியப்புக்குரிய தாக இருக்கும் இந்த ஜாதியை பிரித்தது சலுகைக்காக அரசாங்கம் அன்று அரசாங்கம் அப்படி பிரிக்கையில் எங்களுக்கு ஜாதி அடிப்படையில் சலுகைகள் வேண்டுவதில்லை என்று தற்போது அரசாங்கத்தால் கீழ்ஜாதி என்று முத்திரை குத்தப் பட்டவர்களும் அதைப் பெறுவதற்கு ஆம் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான் எங்களுக்கு அந்த சலுகை வேண்டும் என்று ஒப்புக் கொண்டவர்களும் செய்த தவறுக்கு அரசாங்கமும் அதற்கு சம்பந்தப்பட்டவர்களும் மட்டுமே பொறுப்பு அவர்கள்தான் அரசு தரும் சலுகைகளை இனி வேண்டாம் என்று கூறி தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் இதைவிட்டு பிறரை குறை சொல்வதும் நொந்து கொள்வதும் முறையற்றது. வேதம் ஜாதி பார்ப்பதில்லை நாம் எல்லோரும் பரிசுத்த ஜாதி PONDICHERRY SHANKAR,Evg.

அன்பே முக்கியம்!

*தாய் மதத்தைவிட்டு வெளியேறுவது பெற்ற தாயை கைவிடுவதற்கு சமம்* என பலர் தத்துவம் பேசுகிறார்கள். நான் கேட்கிறேன்: என்னைப் பெற்ற தாய் என்னைப் பார்த்து, *_"உன் அண்ணன் உன்னைவிட உயர்ந்த ஜாதி, உன் தம்பி உன்னைவிட கீழ்ஜாதி"_* என்று சொல்வாரா? *_"உன் தம்பி கல்வி கற்கக்கூடாது; மீறினால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று; கற்றதை ஓதினால் அவன் நாக்கை வெட்டு (மனுநூல் 12:4); அவன் உன்னோடு சம ஆசனத்தில் அமரக்கூடாது; அமர்ந்தால் இடுப்பில் சூடு போடு" (மனுநூல் 8:281)_* என்று பாகுபாடு கற்பித்தால், *"அவர் உண்மையான தாயா இல்லையா?"* என எனக்கு சந்தேகம் வராதா? தத்தெடுத்த தாய்கூட இப்படி கொடுமைப்படுத்தமுடியாதே! இது நம் எல்லாருடைய மனசாட்சிக்கும் தெரிந்திருக்கும்போது, *களங்கமில்லாத அன்புக்கு சொந்தமான தாயை இந்த மிருகத்தனமான மதத்துக்கு எப்படி இணையாக்குகிறீர்கள்?* சக மனிதனிடம் காட்டவேண்டிய அடிப்படை நீதியே இல்லாத கொடிய மதத்தை என் *’தாய்மதம்’* என்று எப்படி சொல்லமுடியும்? இந்துத்துவம் தாய் போன்ற ஒரு மதமானால் அது இப்படி கொடுமைப்படுத்துமா? *இந்து கடவுள்களை சாத்தான்* என்று ஒரு பாதிரியார் சொன்னாராம...

Quotes about caste - Agathiyan

தியாக சிந்தை இல்லாதவன் பிறருக்கு தியாக சிந்தையை போதிக்கமுடியாது. சாதியால் கிடைக்கும் லாபத்தை இழக்காதவர், பிறரை சாதியால் கிடைக்கும் லாபத்தை இழக்கவைக்க முடியாது. சாதியால் கிடைக்கும் சலுகையை இழக்கமுடியாதவர்கள் பிறரை சாதி பார்க்காமல் திருமணம் செய்ய சொல்லும் உரிமையற்றவர்கள். தியாக சிந்தை இல்லாதவன் பிறருக்கு தியாக சிந்தையை போதிக்கமுடியாது. சாதியால் கிடைக்கும் சலுகையை இழக்கமுடியாதவர்கள் பிறரை சாதி பார்க்காமல் திருமணம் செய்ய சொல்லும் உரிமையற்றவர்கள். சாதி பார்த்து திருமணம் செய்தவர்கள், பிறர் சாதி அடிப்படையில் சலுகை வாங்குவது தவறு என்று குற்றம்சாட்டும் உரிமையற்றவர்கள். சாதியால் கிடைக்கும் சலுகையை இழக்காதவர்கள் பிறரை சாதி மறுப்பு திருமணம் செய்ய சொல்லும் உரிமையற்றவர்கள்.  சாதி பார்த்து திருமணம் செய்தவர்கள், பிறர் சாதி அடிப்படையில் சலுகை வாங்குவது தவறு என்று குற்றம்சாட்டும் உரிமையற்றவர்கள். சாதியால் கிடைக்கும் சலுகையை இழக்காதவர்கள் பிறரை சாதி மறுப்பு திருமணம் செய்ய சொல்லும் உரிமையற்றவர்கள்.

Want casteless certificate?

Image

Indian law: No need to mention caste in school

Image

Request letter for School admission without mentioning caste

சாதி அடிப்படையில் சலுகை வேண்டாம். பெறுநர் தலைமை ஆசிரியர் ………………………… …………………………. …………………………. அனுப்புநர் …............................... ………………………… ……………………. மதிப்புக்குரிய ஐயா, எனது மகன் ……….. உங்கள் பள்ளியில் …….ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான். நாங்கள் சாதி மறுப்பு கொள்கை உடையவர்கள். சாதியின் பெயர் பயன்படுத்தப்படும்வரை சாதி ஒழியாது என்பதால் சாதியின் பெயரை பயன்படுத்துவதையே தவறு என்று கருதுகிறோம். எனவே, சாதி பெயரை பயன்படுத்தி கிடைக்கும் எந்த இடஒதுக்கீடும் எங்களுக்கு தேவை இல்லை என்று இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். பள்ளி சான்றிதழில் சாதியின் பெயரை குறிப்பிடவேண்டிய தேவை இல்லை என்று 1973-ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை நகலையும், அதை விளம்பரப்படுத்திய தினமலர் நாளிதழின் நகலையும் இத்துடன் இணைத்துள்ளோம். எனவே, எனது மகனுக்கு சாதி என்னும் இடத்தில் *சாதி இல்லை* என்று பதிவு செய்யவேண்டும் என்று தாழ்மையோடு வேண்டுகிறேன். தங்கள் உண்மையுள்ள

*அம்பேத்கர் கிறிஸ்தவத்தை புறக்கணித்து ஆறு லட்சம் தலித் இந்துக்களோடு புத்த மதத்தை தழுவியது ஏன்?*

*அம்பேத்கர் கிறிஸ்தவத்தை புறக்கணித்து ஆறு லட்சம் தலித் இந்துக்களோடு புத்த மதத்தை தழுவியது ஏன்?* அறிஞர் அம்பேத்கர் இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து இழிவாக நடத்தப்பட்டு இந்துத்துவத்தால் கொடுமைப்படுத்தப்பட்டார். எனவே, அவர் விடுதலையைத் தேடி இந்துத்துவத்தைவிட்டு வெளியேறி, மதம் மாறத் திட்டமிட்டபோது, "அவர் ஏன் விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவின் அன்பின் மார்க்கமாகிய கிறிஸ்தவத்தை தேர்வு செய்யவில்லை?" என்ற நெருடலான கேள்வி என்னை ஆழமாக துளைத்தெடுத்தது. இந்த கேள்வியை எல்லா கிறிஸ்தவர்களும் தங்கள் போதகர்களிடம் கேட்கவேண்டும். இந்தியர்கள் இன்று பின்பற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றும் அளவுக்கு மதிநுட்பமுடைய மாமேதை அல்லவா அம்பேத்கர்! அவரே கிறிஸ்தவத்தை  ஏற்றுக்கொள்ளாதது ஏன் என்னும் கேள்விக்கு விடை கண்டுபிடிப்பது இந்த புத்தகத்துக்கு பொலிவு சேர்க்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒரு சாதாரண நற்செய்தி அறிவிப்பாளராக இருந்த நான் ஒரு தீவிர சாதி மறுப்பு செயல்வீரனாக மாறியதற்கு அம்பேத்கர் கிறிஸ்தவத்தை புறக்கணித்துவிட்டு பௌத்தத்துக்கு மாறியதே ஒரு வலுவான காரணமாக இருந்தது...

நான் எதற்காக சாதி மறுப்பு முகப்பு படம் (DP) வைக்கவேண்டும்"?

அன்பு சகோதரமே, *_"நான் எதற்காக சாதி மறுப்பு முகப்பு படம் (DP) வைக்கவேண்டும்"?_* என்று பல சாதி மறுப்பு சகோதரர்களே கேட்கிறார்கள். அதற்கான பதிலை ஆராய்வோம். இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை அடைந்த நாம் ஒவ்வொருவரும் அந்த இரட்சிப்பை பிறருக்கு அறிவிக்கவேண்டும் என்று கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்(மத் 28:19). அதற்கு கருவிகளாக, *தொலைக்காட்சி, வலையொளி(YOUTUBE), குறுந்தகடுகள்(CD), புத்தகங்கள், பத்திரிக்கைகள், துண்டுப்பிரதிகள் (Tracts), பலகைகள் (Boards)* என்று பலவற்றை பயன்படுத்துகிறோம். அதேபோல நமது நம்பிக்கையை நமது *முகநூல் (Facebook), வாட்சப்* போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் பரப்புகிறோம். மற்றும், நாம் எப்படிப்பட்ட நிலைப்பாட்டில் வாழ்கிறோம் என்பதை பிறருக்கு எளிதில் வெளிப்படுத்த *முகப்பு படங்களை (DP)* ஒரு நல்ல கருவியாக பயன்படுத்தலாம். பலர் தங்கள் DP மூலம் இந்த எளிய ஊழியத்தை செய்துகொண்டிருக்கிறார்கள். நீங்களும் உங்கள் முகப்பு படத்தில் ஒரு சாதி மறுப்பு வாசகத்தை வைக்கலாமே சகோ! அதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் பேசலாம்.

திருநெல்வேலி பாஸ்டர்

*திருநெல்வேலி பாஸ்டர்:* சாதியை பற்றி நீங்கள் பிரசங்கம் பண்ணாதீர்கள். சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். சாதி தானாக ஒழிந்துவிடும். *சாதி மறுப்பாளர்:* அப்படியென்றால் நாகர்கோயில், திருநெல்வேலி, தூத்துக்குடியிலுள்ள 99% பாஸ்டர்களும் சாதி பார்க்கிறார்களே! எந்த பாஸ்டரும் சுவிசேஷத்தை கேள்விப்படவில்லையா?

எனது கேள்விக்கு எனது பதில்கள்:

எனது கேள்விக்கு எனது பதில்கள்:                     --------------------  முதலில் கிறித்தவ – இசுலாம் மதங்களில் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது இல்லை. இது அம்மதக் கோட்பாடுகளிலும் சரி, புனித நூல்களிலும் சரி தெளிவாக இருக்கிறது. தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ அனைவரும் வழிபாடு செய்யலாம். சாதிக்கேற்ற பிரிவுகளோ, தனி ஆலயங்களோ கிடையாது. அனைவரும் சேர்ந்து உண்ணும் வழக்கமும் உண்டு. எவரும் ஒரு பாதிரியாராகவோ, கன்னியாஸ்தீரியாகவோ, மௌல்வியாகவோ உருவாக முடியும். இவை அனைத்தும் பார்ப்பனியத்தில் கிடையாது. அது பிறப்பு முதல் இறப்பு வரை பாகுபாடு பார்க்கும் ஒரு வாழ்க்கை முறை. எனவே இந்தியாவில் கிறித்தவ, முசுலீம் மதங்கள் அறிமுகமான போது பெருவாரியான ஒடுக்கப்பட்ட மக்கள் அம்மதங்களுக்கு மாறினர். காலப்போக்கில்தான் இம்மதங்களிலும் சாதிப்பாகுபாடு பார்ப்பனியத்தின் செல்வாக்கினால் நுழைந்தது. இன்றும் முசுலீம் மதத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவு. கிறித்த மதத்தில் கொஞ்சம் அதிகம். சொல்லப்போனால் சாதிய ஏற்றத்தாழ்வை ஏற்றுக் கொண்டதாலேயே கிறித்தவ மதம் கொஞ்சம் வே...

புறக்கணித்து இழிவுபடுத்துவது தீண்டாமை...

திருநெல்வேலியிலுள்ள *நாஞ்சாங்குளம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.* திருநெல்வேலியிலுள்ள *டக்கரம்மாள்புரம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.* சிவகாசியிலுள்ள *சாட்சியாபுரம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.* மதுரையில் திருமங்கலம் என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.* ஈரோடு மாவட்டம் *கோபி செட்டிப்பாளையத்தில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரிய சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது. ஈரோடு மாவட்டம் *சத்தியமங்கலத்தில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்...

சாதியம் இந்துத்துவ கொள்கை

*சாதியம் இந்துத்துவ கொள்கை* சாதியம் என்னும் கொள்கை கோடிக்கணக்கானோரின் உயிரைக் குடித்த ஒரு கொடிய தத்துவம் என்பது இந்தியாவில் பிறந்த எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் தெரியும். முதன்முதலில் யாரால் அந்த கொள்கை உருவாக்கப்பட்டது என்னும் முக்கியமான கேள்விக்கு விடை  கண்டுபிடிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு சாதியத்தை கடைபிடிப்போரை மட்டும் குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை. சாதி அடிப்படையில் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான் என்று இந்துத்துவம் கூறுகிறது. அந்த கருத்தை உறுதி செய்ய மனிதன் தோன்றிய வரலாற்றை ஆராயவேண்டும். இவ்வுலகில் மனிதன் தோன்றியது எப்படி என்பதைப் பற்றி பலரும் பல கொள்கைகளை சொல்கிறார்கள். என் அறிவுக்குத் தெரிந்த இரண்டு கொள்கைகளை இங்கே குறிப்பிடுகிறேன். மூன்றாம் கொள்கையை அடுத்த அத்தியாயத்தில் விளக்குகிறேன். அவற்றை ஆய்வு செய்தால் சாதிக்கொள்கை எங்கிருந்து வந்தது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளலாம். முதலாவதாக, மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று நாத்திகர்கள் சொல்கிறார்கள். குரங்கின் DNA-க்கும் மனிதனுடைய DNA-க்கும் சில ஒருமைப்பாடுகள் இருப்பதால்தான் மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் எ...