சாதியம் இந்துத்துவ கொள்கை
*சாதியம் இந்துத்துவ கொள்கை* _"சாதியம் இந்தியாவை அழிப்பதற்குமுன் சாதியத்தை அழித்துவிடுங்கள்"_ என்று எழுத்தாளர் *K.R. வெங்கடாசலம்* எழுதுகிறார். அவர் சொல்வதுபோல சாதியம் இந்திய நாட்டையே அழிக்கும் அளவுக்கு ஆபத்தானதா இல்லையா என்று ஒவ்வொரு இந்தியனும் திறந்த மனதோடு ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சாதியம் என்னும் சமூகவிரோதக் கொள்கை கோடிக்கணக்கானோரின் உயிரைக் குடித்த ஒரு கொடிய தத்துவம் என்பது இந்திய சமூக வரலாற்றை படிக்கும் எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் தெரியும். முதன்முதலில் யாரால் அந்த கொள்கை உருவாக்கப்பட்டது என்னும் முக்கியமான கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு சாதியத்தை கடைபிடிப்போரை மட்டும் குற்றம் சாட்டுவதிலும் அர்த்தம் இல்லை. சாதியம் யாரால் உருவாக்கப்பட்டது என்பதை அறிய மனிதன் தோன்றிய வரலாற்றை ஆராயவேண்டும். இவ்வுலகில் மனிதன் தோன்றியது எப்படி என்பதைப் பற்றி பலரும் பல கொள்கைகளை சொல்கிறார்கள். என் அறிவுக்குத் தெரிந்த இரண்டு கொள்கைகளை இங்கே குறிப்பிடுகிறேன். மூன்றாம் கொள்கையை பிறகு விளக்குகிறேன். அவற்றை ஆய்வுசெய்தால்...