Posts

Showing posts from February, 2020

சாதியம் இந்துத்துவ கொள்கை

*சாதியம் இந்துத்துவ கொள்கை* _"சாதியம் இந்தியாவை அழிப்பதற்குமுன் சாதியத்தை அழித்துவிடுங்கள்"_ என்று எழுத்தாளர் *K.R. வெங்கடாசலம்* எழுதுகிறார். அவர் சொல்வதுபோல சாதியம் இந்திய நாட்டையே அழிக்கும் அளவுக்கு ஆபத்தானதா இல்லையா என்று ஒவ்வொரு இந்தியனும் திறந்த மனதோடு ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சாதியம் என்னும் சமூகவிரோதக் கொள்கை கோடிக்கணக்கானோரின் உயிரைக் குடித்த ஒரு கொடிய தத்துவம் என்பது இந்திய சமூக வரலாற்றை படிக்கும் எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் தெரியும். முதன்முதலில் யாரால் அந்த கொள்கை உருவாக்கப்பட்டது என்னும் முக்கியமான கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு சாதியத்தை கடைபிடிப்போரை மட்டும் குற்றம் சாட்டுவதிலும் அர்த்தம் இல்லை. சாதியம் யாரால் உருவாக்கப்பட்டது என்பதை அறிய மனிதன் தோன்றிய வரலாற்றை ஆராயவேண்டும். இவ்வுலகில் மனிதன் தோன்றியது எப்படி என்பதைப் பற்றி பலரும் பல கொள்கைகளை சொல்கிறார்கள். என் அறிவுக்குத் தெரிந்த இரண்டு கொள்கைகளை இங்கே குறிப்பிடுகிறேன். மூன்றாம் கொள்கையை பிறகு விளக்குகிறேன். அவற்றை ஆய்வுசெய்தால்...

கிறிஸ்தவர்களால் வளரும் இஸ்லாம்

*கிறிஸ்தவர்களால் வளரும் இஸ்லாம்* கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிப் பாகுபாடுகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய காரணமாக இருக்கின்றன என்பதை பல சம்பவங்கள் நமக்கு தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன. ஒருமுறை மதுரை மாநகரில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஓர் இளைஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் நற்செய்தி அறிவிப்பதற்காக, _"தம்பி உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளலாமா?"_ என்று கேட்டேன். அதற்கு அவர், _"என்னுடைய பழைய பெயர் *டேனியல்.* கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறி இப்போது *ரமனுல்லா* என்று மாற்றியிருக்கிறேன்"_ என்றார். அவருடைய அந்த பதில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. _"நீங்கள் பிறந்ததே கிறிஸ்தவ குடும்பமா?"_ என்று கேட்டேன். _"இல்லை ஐயா! நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவன்; தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன். இந்துவாக இருக்கும்போது சாதி துவேஷக் கொடுமைகளை அனுபவித்தேன். அந்த அவமானச் சாக்கடையிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருக்கும் போது, கிறிஸ்தவர்கள் எங்கள் கிராமத்துக்க...

இயேசு கிறிஸ்து ஏன் இவ்வளவு கொடுமையாக சாகவேண்டும்?

*இயேசு கிறிஸ்து ஏன் இவ்வளவு கொடுமையாக சாகவேண்டும்?* இந்த கேள்வியை இறை வார்த்தை தெரிந்த எந்த கிறிஸ்தவரிடம் கேட்டாலும், _*"பாவிகளை மீட்க* கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார். இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது" (1 திமொத்தேயு 1:15),_ என்று சொல்வார். அந்த கூற்றை உறுதி செய்யும் சில வசனங்களை பார்ப்போம். _ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் *மீட்படைவீர்கள்"* (திருத்தூதர் பணிகள் 16:31)_ _"இயேசு ஆண்டவர்" என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் *மீட்புப் பெறுவீர்கள்.* (உரோமையர் 10:9)_ என்று திருத்தூதர் பவுல் இயேசு கிறிஸ்துவைப்பற்றி கூறினார். _இவராலேயன்றி (இயேசு) வேறு எவராலும் *மீட்பு இல்லை.* ஏனென்றால் நாம் *மீட்புப் பெறுமாறு* வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை(திருத்தூதர் 4:12)_ _அவரிடம் (இயேசுவிடம்) நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் *பாவமன்னிப்புப் பெறுவர்* (திருத்தூதர் 10:43)_ என்று திருத்...