சாதியை பற்றி சகோ மோகன் சி லாசரஸ் அவர்களின் கருத்து.

*சாதியை பற்றி சகோ மோகன் சி லாசரஸ் அவர்களின் கருத்து.*

சாதி....  நான் இன்ன சாதி என்று நீ சொல்லும்பொழுதே தேவனால் சிருஷ்டிக்கப் பட்ட இன்னொரு மனிதனை அவமானப் படுத்துகிறாய்.

சாபம்.... சாதி பெருமை விட்டு மனம் திரும்பு. உன் சாதி உன்னை நரகத்திற்கு கொண்டு செல்லும். நான் இன்ன சாதி என்று நீ சொல்லும்பொழுதே இன்னொரு மனிதனை அவமானப் படுத்துகிறாய். அவன் தேவனால் உருவாக்கப் பட்டவன். அவள் தேவனால் சிருஷ்டிக்கப் பட்டவள். தேவனால் உண்டாக்கப்பட்ட ஒருவனை நீ தாழ்ந்த சாதி என்று அவமானப் படுத்துகிறாய். அது சாபமாய் மாறும். உன் பிள்ளைகள் உனக்கு அவமானத்தை கொண்டு வருவார்கள். அந்த சாபத்தின் மூலம் வரும் பாதிப்பு உன் பிள்ளைகள் மூலமாய் வெளிப்படும்.

சாதாரணமாய் நினைக்கிறாய் சாதி பிரச்சினையை. அது சாபத்தை கொண்டு வரும். தேவனுடைய வசனத்தின் வெளிச்சத்திலே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தேவன் சாதியை எவ்வளவாய் அருவருக்குகிறார் என்று அறிந்து கொள்ள முடியும். ஒரு கிறிஸ்தவ னுக்கு சாதி உணர்வு இருக்க கூடாது. நீ எப்போது சாதி உணர்வுடன் இருக்கிறாயோ நீ கிறிஸ்தவன் அல்ல. You are  not a Christian. உனக்கு மோட்சத்தில் இடம் இல்லை என்று அறிந்து கொள்.

சாபம்.... சமுதாயத்தில் சாதி என்ற கொடுமையினால் எத்தனை ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் தெரியுமா? சாபம்..... துன்மார்க்கம்..... சாதி சங்கம் வைத்து கொண்டு சாதி பெருமை பேசிக் கொண்டு இருந்தால் உன் குடும்பத்திற்கு சாபத்தை வருவித்து கொள்ளுகிறாய்.

சகோ. மோகன் சி லாசரஸ்,
இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள்.
நாலுமாவடி.

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை